இங்கிலாந்தில் ஈ.வே.ராமசாமி பிரசங்கம் தொழில் கட்சியின் போலித்தன்மை. குடி அரசு - சொற்பொழிவு - 18.12.1932 

Rate this item
(0 votes)

தோழர்களே! 

இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டீஷ் தொழில்க் கஷியை மிக மிகப் பரிக சிக்கத்தக்க விஷயமாய் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்: 

1. ஏனெனில் தொழில் கஷித் தலைவராகியத் தோழர் லான்ஸ்பரி அவர்கள் சிப்பாய்கள் சுடுவதையும், கொல்லுவதையும் தாம் சிறிதும் விரும்புவதில்லை என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார். ஆனால் எங்கள் கார்வாத் (Gharwath) சேனைகள் நிராயுதபாணிகளான மக்களைச் சுடுவதற்கு மறுத்ததற்காகத் தோழர். லான்ஸ்பரியின் தொழிற்கடீ கவர்ன்மெண்டானது அந்தச் சிப்பாய்களுக்கு 15 வருஷ கடின காவல் தண்டனை விதித்திருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். 

2. தொழிலாளர் சங்கமாகிய டிரேட் யூனியனை ஆதரிப்ப தாகவும், அதில் சேர்ந்து உழைப்பதாகவும் பறை சாற்றுகிறீர்கள், ஆனால் எங்கள் ஏழை இந்திய சுரங்க வேலைக்காரர்களும், மற்ற தொழிலாளிகளும், சேர்ந்து ஒருட்ரேட் யூனியன் சங்கம் ஸ்தாபித் ததற்காக அதன் அதிகாரிகளையும், அதற்கு உதவி செய்த பிரிட்டிஷ் தோழர்களையும் வெளியில் இருக்க விடாமல் உங்கள் தொழில் கக்ஷி அரசாங்கமானது மீரத்து சிறையில் அடைத்துப் போட்டு விட்டது. 

3. தோழர் லான்ஸ்பரி அவர்கள் இந்தியர்கள் விஷயத்தில் மிக்க அனுதாபமிருப்பதாகவும், இந்தியர்கள் சுடப்படுவதையும், அடிக்கப் படுவதையும், சிறையில் அடைக்கப்படுவதையும் தாம் விரும்புவ தில்லை என்றும் சொல்லிக் கொள்வதாகக் கேள்விப் பட்டேன், ஆனால் தோழர் லான்ஸ்பரி யுடைய தொழில் கக்ஷி அரசாங்க கேபினட்டானது சுமார் 80000 பேர் வரை இந்திய ஆண் பெண்களை ஜெயிலில் அடைத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது. 

ஆப்ரிடிகன் கிராமங்களின் மீது ஆயிரக் கணக்கான தடவை ஆகாயப்படை மூலம் கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. 

நூற்றுக்கணக்கான பர்மியர்களையும், கிராமத்தாரையும் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? 

  1. இந்திய சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு 8 அணா கூலிக்கு இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகின்றது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் ஐந்தனா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த கொடுமையையும். ஆபாசத்தையும் நிறுத்த தொழில் கட்சி அரசாங்கம் என்ன செய்தது? 
  1. தோழர் லான்ஸ்பரி அவர்கள் இங்கிலாந்தில் தொழிலாளி களை ஆதரிக்க வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் இந்திய விஷயத்தில் தோழர் காந்தியையும், இர்வின் பிரபுவையும் கொடுமை யான வட்டமேஜை மகா நாட்டையும் ஆதரிக்கிறார். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இந்தியாவானது இந்திய அரசர்களும், ஜமீன்தாரர் களும், முதலாளிமார்களும், ஐரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும் படியானதும் தொழிலாளிகளுக்கும். குடித்தனக்காரர் களுக்கும் பாத்தியமும் பொருப்பும், இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் இந்திய நிர்வாகம் நடக்கும் படியான காரியத்திற்கு உதவி செய்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? 
  2. தோழர் லான்ஸ்பரி அவர்கள் யுத்தத்தையும், யுத்த முஸ்தீபையும் வெறுக்கிறதாக சொல்லுகிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் துருப்புகளையும், பிரிட்டிஷ் வைசிராயையும் திருப்பி அழைத்துக் கொள்ள மறுக்கிறார். 

7. கடைசியாக இருந்த தொழிற் கட்சி அரசாங்கமானது இரண்டு வருஷ காலத்தில் அனுப்பிய ஆகாய சண்டைக் கப்பல்களையும், வெடிகுண்டுகளையும், மோட்டார் பீரங்கி வண்டிகளையும் கவசம் செய்த மோட்டார் வண்டிகளையும், யந்திரத் துப்பாக்கிகளையும். பிரிட்டிஷ் பட்டாளங்களை யும் கணக்கு பார்த்தால் பால்ட்வின் அரசாங்கமானது தனது 5 வருஷம் ஆட்சியில் அனுப்பப்பட்டதை விட அதிகமாகவே இருக்கிறது. தோழர்களே! இவற்றிலிருந்து பிரிட்டிஷ் தொழிலாளர் பார்ட்டி என்று சொல்லப்படும் சமதர்ம பார்ட்டியின் யோக்கியதையை அறிந்து கொள்வது என்பது எங்களுக்கு மிகக் கஷ்டமாகவே இருக்கிறது. 

ஆதலால் யாக்ஷையார் தொழிலாளிகளே நீங்கள் இந்த போலி கட்சிகளையும், கொள்கைகளையும், நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும். சுதந்திரத்துக்கும் சமத்துவத்திற்கும் உண்மையாகவே போராட உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர் நோக்கிக் கொண்டிருங்கள். 

குறிப்பு: 20-05-1932 ஆம் நாள் இங்கிலாந்து மேக்ஸ்ப்ரோ பான்சிலே லேக் பார்க்கில் பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர் தோழர் லான்ஸ்பரி பேசியதற்கு பதில் அளித்து உரை. 

குடி அரசு - சொற்பொழிவு - 18.12.1932

 
Read 21 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.